Crypto and Banking
We recommend the following high-quality options for secure Bitcoin transactions and online banking services:
BTC and ETH QR code generator websites
CRA Login Canada Revenue Agency
MyCRA Login | CRA Tax Refund | MyCRA | CRA My Account
MyCRA Login | CRA Tax Return | MyCRA | CRA My Account
RBC Royal Bank Login
RBC Canada | RBC Online Banking Sign In| Royal Bank Canada Business Login
CIBC Online Banking Login/span>
TD EasyWeb Canada Trust Login
TD EasyWeb Login | TD EasyWeb Banking Login | TD Canada EasyWeb Login| Login TD EasyWeb | TD Online Banking Login
ஒரு மனிதன் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு கண்டிப்பாக ஆறு மணி நேரம் அல்லது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்று பொதுவாக அனைத்து மருத்துவர்களும் கூறுகிறார்கள். ஆனால் அப்படி நாம் கணக்கு பார்த்து தூங்க வேண்டிய அவசியம் இல்லை.
நாம் பொதுவாக நம் உடலுக்கு மூன்று விதமாக வேலைகளைக் கொடுக்கிறோம். ஒன்று உடல் ரீதியான வேலை, இரண்டு மனரீதியான வேலை மூன்று புத்தி ரீதியான வேலை. இதில் எந்தெந்த வேலைக்கும் தூக்கத்திற்கும் சம்பந்தம் உண்டு என்று பார்ப்போம்.
ஒரு சிலர் உடலுக்கு மட்டும் அதிக வேலையை கொடுப்பார்கள். மனதிற்கும் புத்திற்கும் அதிகவேலை கொடுக்கமாட்டார்கள். இவர்கள் முதல்வகை, உடல்ரீதியாக வேலை கொடுப்பார்கள். உதாரணமாக கூலி வேலை செய்பவர்கள். இவர்களுக்கு புத்தி இல்லை என்று அர்த்தம் கிடையாது. புத்திக்கு அதிக வேலை இல்லை மனதிற்கும் அதிகமாக வேலை இருக்காது. கூலி வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் பியூன் வேலை செய்பவர்கள் அவர்களை நன்றாக கவனியுங்கள். இவர்கள் வா என்றால் வருபவர்கள் போ என்றால் போவார்கள். முதலாளி கொடுக்கும் வேலையை மட்டும் செய்வார்கள் அதிகமாக அதைபற்றி ஆராய்ச்சி செய்யமாட்டார்கள். இப்படி உடல் சார்ந்த வேலையை செய்பவர்கள் ஒரு வகை அது முதல் வகை இரண்டாவது வகை புத்தி சார்ந்த வேலை செய்பவர்கள். இவர்கள் புத்திக்கு மட்டும் அதிகம் வேலை கொடுப்பார்கள். உடலுக்கும், மனதிற்கும் குறைவாக வேலை கொடுப்பவர்கள். உதாரணமாக முதலாளிகள், ஆராய்ச்சியாளர்கள். இவர்களுக்கு புத்திக்கு மட்டுமே அதிக வேலை கொடுப்பவர்கள். நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு நமது நிறுவனத்தை எப்படி நல்லபடியாக இயங்க வைப்பது, பணம் எப்படி சம்பாதிப்பது, வியாபாரம் எப்படிச் செய்வது போன்ற யுத்திகளை எப்பொழுது பார்த்தாலும் யோசித்துக் கொண்டே இருப்பார்கள்.
எனவே உடலுக்கு இவருக்கு அதிகமாக வேலை இருக்காது. மேலும் வியாபாரம் செய்யும்பொழுது குறிப்பாக பலர் மனதிற்கு வேலை கொடுத்து மனசாட்சியின்படி நடந்து கொள்வது இல்லை. மனசாட்சியைப் பயன்படுத்தினால் வியாபாரம் ஒழுங்காக நடக்காது. எனவே முதலாளிகள் புத்திக்கு மட்டுமே அதிகம் வேலை கொடுக்கிறார்கள். மனதிற்கும், உடலுக்கும் குறைவாக வேலை கொடுக்கிறார்கள். அதேபோல் ஆராய்ச்சியாளர்கள்(Scientist)எப்பொழுதுப் பார்த்தாலும், புத்திக்கு வேலை கொடுப்பதே கிடையாது. இப்படிப் புத்திக்கு மட்டும் வேலை கொடுத்து மனதிற்கும், உடலிற்கும் வேலையை குறைவாகக் கொடுப்பவர்கள் இரண்டாவது வகை.
சிலர் மனதிற்கும் மட்டும் அதிக வேலை கொடுப்பார்கள். இவர்கள் புத்தியைக் குறைவாகப் பயன்படுத்துவார்கள். மேலும் உடல் உழைப்பும் குறைவாக இருக்கும். யார் யாரெல்லாம் மனதில் சில பிரச்சனைகளை எப்பொழுதுப் பார்த்தாலும் யோசித்துக் கொண்டு கவலை, டென்ஷன், கோபம், பயம் இது போன்ற உணர்ச்சி வசப்பட்டு வாழ்பவர்களுக்கு மனதிற்கு மட்டுமே அதிகவேலை இருக்கும். இவர்களுக்கு புத்திக்கும், உடலிற்கும் குறைவாகவே வேலை இருக்கும் இவர்கள் மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள்.
மேலே கூறப்பட்டுள்ள மூன்று வகைகளையும் பாருங்கள். இதில் உடலிற்கு வேலை கொடுத்தால் மட்டுமே தூக்கம் தேவைப்படும், தூக்கம் வரும், தூங்க முடியும்.
மனதிற்கும் புத்திக்கும் வேலை கொடுத்தால் தூக்கம் தேவையில்லை. தூக்கம் வராது. தூங்க முடியாது. உடலுக்கு கொடுக்கும் வேலையை சரிசெய்வதற்கும் தூக்கம் வேண்டும். மனதிற்கும், புத்தி'ற்கும் கொடுக்கும் வேலையை சரிசெய்வதற்கு தூக்கம் தேவையில்லை. ஆனால் ஓய்வு வேண்டும். ஓய்வு என்பது வேறு. தூக்கம் என்பது வேறு ஓய்விற்கும், தூக்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஓய்வு என்பது மனதை அமைதிப்படுத்தும், புத்தியை அமைதிப்படுத்தும் தூக்கம் என்பது உடலை அமைதிப்படுத்தும்.
புத்திக்கு வேலை கொடுக்கும் ஒரு முதலாளியும் உடலுக்கு அதிகமாக வேலை கொடுக்கும் ஒரு தொழிலாளியும். இருவரும் இரவு 10 மணிக்குப் படுக்கைக்கு செல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உடலிற்கு வேலை கொடுக்கும் தொழிலாளி படுத்தவுடன் அவருக்கு உறக்கம் வந்துவிடும், அவர் தூங்கிவிடுவார். புத்திக்கு வேலை கொடுத்த முதலாளி இரவு 10 மணி முதல் 1 மணி வரை புரண்டு, புரண்டு படுத்துக் கொண்டே இருப்பார். ஆனால் அவருக்கு தூக்கம் வராது. ஆனால் முதலாளி என்ன நினைப்பார். என்னிடம் வேலை செய்யும் ஒரு தொழிலாளி எப்படி நிம்மதியாகத் தூங்குகிறான். என் வங்கியில் கோடிக்கணக்கான பணம் உள்ளது. ஆனால் என்னால் தூங்கமுடியவில்லையே என்று அவர் கவலைப்படுவார். இது எதனால் இப்படி நடக்கிறது என்றாலம் உடலுக்கு வேலை கொடுத்த தொழிலாளிக்கு ஓய்வு தேவையில்லை, ஆனால் உறக்கம் தேவை என்பதால் அவர் உடனே உறங்கிவிடுகிறார். ஆனால் புத்திக்கும், மனதிற்கும், வேலை கொடுத்த முதலாளிக்கு புத்திற்கும், மனதிற்கும் ஓய்வுத் தேவை என்பதால் இரவு 10 மணி முதல் இரவு 1 மணி வரை அவர் புத்தியும் மனதும் ஓய்வு எடுக்கிறது. அதனால்தான் அவர் புரண்டு, புரண்டுப் படுக்கிறார்.
நாம் காலையில் எழுந்தவுடன் நமது புத்தியை மற்றும் மனதைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறோம். அதற்கு சரியான ஓய்வு கொடுப்பதில்லை. இரவு நாம் படுத்தப் பிறகுதான் இது இரண்டும் தன்னைத்தானே ஓய்வுபடுத்தி, சாந்தப்படுத்தி, அமைதிப்படுத்திக் கொள்கிறது. புத்தியும், மனதும் தன்னைத்தானே சரி செய்துக் கொள்ளும்வரை ஒரு மனிதனுக்கு தூக்கம் வராது.
ஒரு சிறு உதாரணம் ஒரு பெரியத் துணி கடையில் காலை 9 மணிக்குக் கதவை திறந்து வியாபாரம் ஆரம்பிப்பார்கள். கடையைத் திறக்கும் பொழுது அனைத்து துணிகளும் ஒழுங்காக சரியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். துணி வாங்க வருபவர்கள் அனைத்து துணிகளையும் கலைத்து தங்களுக்கு தேவையான துணிகளை எடுப்பார்கள். அப்பொழுது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வியாபாரம் நடக்கும் நேரங்களில் துணிகள் கலைந்து கொண்டே இருக்கும். ஆனால் அதை அடுக்கி வைப்பதற்கு நேரம் இருக்காது. இரவு 9 மணிக்கு கடையில் கதவை அடைக்கப்பட்ட பிறகு அங்கெ வேலை செய்பவர்கள் உடனே வீட்டிற்கு செல்லமுடியாது. குறைந்தது ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணி நேரம் காத்திருந்து கலைந்த துணிகளை ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு, பின்னர் அவர் வீட்டிற்குச் செல்லவேண்டும். அப்பொழுது தான் அடுத்த நாள் காலையில் கடை சுத்தமாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். இதை புரிந்து கொண்டால் தூக்கத்தைப் பற்றி நாம் சுலபமாக புரிந்து கொள்ளலாம்.
எனவே காலையில் நாம் எழுந்தவுடன், நமது மனதையும், புத்தியையும் கலைத்துப்போட ஆரம்பிக்கிறோம். ஆனால் அடுக்கி வைப்பதே கிடையாது. இரவு 10 மணிக்கு நாம் படுத்தவுடன் நமது மனதும், புத்தியும் தன்னைத்தானே அடுக்கி வைக்க ஆரம்பிக்கிறது. இப்படி மனதும், புத்தியும் தன்னைத்தானே அமைதிப்படுத்தி, ஒழுங்குபடுத்துவதற்கு சில மணி நேரம் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் தான் நாம் தூக்கம் வரவில்லையே என்று பயந்துபோய் புலம்பிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில்தான் நாம் புரண்டு, புரண்டுப் படுப்போம். ஆனால் தூக்கம் வராது. இதை புரிந்து கொள்வதற்கு ஒரு காரியம் செய்யுங்கள். யாருக்கு பல வருடங்களாக படுத்தவுடன் தூக்கம் வராமல் 3 மணி நேரம் புரண்டு, புரண்டு படுக்கிரார்களோ நீங்கள் ஒரு நாள் 10 அல்லது 20 கி.மி தூரம் வரை நடந்துச் சென்று படுத்துப்பாருங்கள். படுத்துவுடன் உங்களுக்குத் தூக்கம் வந்துவிடும். இத்தனை நாட்களாக படுத்தவுடன் தூக்கம் வராது நீங்கள் இன்று எப்படிப் படுத்தவுடன் தூங்குகிறீர்கள் என்பதைச் சற்று யோசியுங்கள். உடலுக்கு வேலை கொடுத்தால் மட்டுமே தூக்கம் தேவை. தூக்கம் வரும். மனதிற்கும், புத்திக்கும் வேலை கொடுத்தால் தூக்கம் வரவில்லையோ தயவு செய்து மனதில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.தூக்கம் வந்தால் மட்டுமே அதாவது தூக்கம் தேவை என்றால் மட்டுமே நமக்குத் தூக்கம் வரும். தேவையில்லாத தூக்கத்தை நாம் ஏன் எதிர்ப்பார்க்க வேண்டும். அதற்காக நாம் ஏன் பயப்பட வேண்டும்?
எனவே நமக்கு ஓய்வு எப்பொழுது வேண்டுமோ அப்பொழுது படுக்கைக்கு செல்ல வேண்டும். கண்ணை மூடி படுக்கையில் தளர்வாகப் படுப்பது மட்டுமே நம் வேலை. முதலில் மனதையும், புத்தியையும் ஒழுங்குபடுத்த ஆரம்பிக்கும் இந்த வேலை முடிந்த அடுத்த வினாடி உடலுக்குத் தேவையான தூக்கம் வரும். எப்பொழுது உடலுக்குத் தேவையான தூக்கம் முடிகிறதோ அப்பொழுது நமக்கு விழிப்பு வரும். இப்படிப் படுத்தால் நாமாக தூங்கவேண்டும், நாமாக எந்திரிக்க வேண்டும். இப்படி ஒரு நாள் தூங்கி எழுந்தால்,இதுவே ஆரோக்கியமான நிம்மதியான, அமைதியான ஒழுங்கான தூக்கமாகும்.
ஆனால் நம்மில் பலர் படுத்தவுடன் தூக்கம் வரவில்லை என்றால் ஒரு வேளை BP அதிகமாக இருக்குமோ, ஒரு வேளை சுகர் குறைவாக இருக்குமோ ஒரு வேளை நமக்கு ஏதாவது ஒரு நோய் வந்திருக்குமோ என்று, தேவையில்லாமல் கற்பனை செய்து தேவையில்லாமல் பயப்பட்டு மனதையும், புத்தியும் மேலும் கலைத்துப் போடுகிறோம். இப்படி தூக்கம் வரவில்லையே என்று நினைத்துப்படுத்திருந்தால் அதுவே ஒரு மிகப்பெரிய நோய். இப்படி நாம் பயப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டு படுத்திருக்கும் போது நமது தூக்கம் இன்னும் தள்ளிப்போகிறது ஏனென்றால், நாம் மனதையும், புத்தியையும் மேலும், மேலும் கலைத்து போடுகிறோம். அதை அடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே சற்று யோசித்துப் பாருங்கள். காலை முதல் மாலை வரை நாம் பல இடங்களில் தவறாகப் பேசி இருப்போம். சில விஷயங்களை, மறந்திருப்போம். சில விஷயங்களில் தவறான முடிவு எடுத்திருப்போம். இரவு படுத்தவுடன் இவை அனைத்தும் நமக்கு ஞாபகம் வரும். உதாரணமாக நாம் இன்று ஒருவரை இதுபோல திட்டியிருக்கக்கூடாது. நாம் தவறு செய்துவிட்டோம் என்று இரவு படுத்தப்பிறகுதான் ஞாபகம் வரும். அல்லது புரியும். நாம் இன்று செய்யவேண்டிய வேலையை ஏதாவது மறந்திருந்தால் அதுவும் படுத்தபிறகுதான் ஞாபகம் வரும். இந்த கலைத்துப் போட்ட விஷயங்களை மறந்த விஷயங்களை சரிசெய்யும் வரை நமக்கு தூக்கம் வராது. இதை சரிசெய்து முடித்தவுடன் நாம் தூங்கி விடுவோம், எனவே தயவு செய்து இரவு படுத்தவுடன் யாருக்கு தூக்கம் வரவில்லையோ அவர்கள் பயப்படவேண்டாம். படுத்தவுடன் தூங்குபவர்கள் நாம் உடலுக்கு அதிகமாக வேலை கொடுத்திருக்கிறோம் என்று சந்தோஷப்படுங்கள். படுத்தவுடன் தூக்கம் வராதவர்கள் நாம் உடலுக்கு அதிகமாக வேலை கொடுக்கவில்லை, அதைவிட மனதிற்கும், புத்திக்கும் தான் அதிகமாக வேலை கொடுத்திருக்கிறோம், எனவே நமது மனமும், புத்தியும் தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் தான் தூக்கம் வரவில்லை என்று புரிந்துகொண்டு அமைதியாக இருந்தால் இந்த மனமும் புத்தியும், சீக்கிரமாக அதைச் சரிசெய்து விட்டு சீக்கிரமாக தூக்கம் வந்து விடும்.
எனவே தூக்கத்திற்கும், ஓய்விற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள். தூக்கம் என்பது நமக்கு ஏற்கனவே தெரியும்.ஓய்வு என்றால் தூங்காமல் மனதையும், புத்தியும் அடுக்கிவைக்கும் நிலை என்று பொருள். இந்த ஓய்வை கீழ்க்கண்ட முறையில் நாம் எடுக்க முடியும்.
ஒன்று படுத்துக் கொண்டு கண்களை மூடிக்கொள்ளலாம். தூங்க வேண்டிய அவசியம் இல்லை. புரண்டு, புரண்டு படுத்தாலே போதும். ஓய்வு கிடைத்துவிடும்.
இரண்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டு கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருக்கலாம்.
மூன்று நாற்காலியில் அமர்ந்து கொண்டு முன்னால் இருக்கும் டேபிள்(Table) அல்லது ஏதாவது ஒரு இடத்தில் நம் தலையை தாங்கி வைத்துக் கொண்டால் சிறப்பாக ஓய்வு எடுக்க முடியும். அல்லது இரண்டு கால்களை நீட்டி சுவற்றின் ஓரமாக நேரடியாக முதுகை சுவற்றில் நேரடியாக வைக்காமல் ஏதாவது ஒரு தலையணை அல்லது விரிப்பை பயன்படுத்தி சாய்ந்து அமர்ந்து கழுத்தை தொங்க போட்டுக் கொண்டால் ஓய்வு கிடைக்கும்.
நாம் இங்கு ஓய்வு, ஓய்வு என்று பார்த்துக் கொண்டிருக்கும் விஷயம் தான் தியானம் என்று அழைக்கிறார்கள். தியானம் என்று வார்த்தையைப் பயன்படுத்தும்பொழுது ஏதோ ஆன்மீக வாதிகளும், பொழுது போகாதவர்களும், வயதானவர்களும் செய்வது என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஓய்வுக்கு மற்றொரு பெயர்தான் தியானம். எனவே தியானம் செய்யும்பொழுது நம்முடைய மனதும், புத்தியும் ஓய்வு எடுக்கிறது. எனவே தான் தியானம் செய்பவர்களுக்கு படுத்தவுடன் தூக்கம் வருகிறது. நான் தியானம் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் படுத்தவுடன் தூக்கம் வரவில்லை என்று யாராவது கூறினால் நீங்கள் ஒழுங்காக தியானம் செய்யவில்லை என்று அர்த்தம்.
ஆனால் பலர் இரவு படுத்தவுடன் தூக்கம் வரவில்லை என்றால் பயப்பட்டு நமக்கு ஏதோ நோய் வந்துவிட்டது என்று எண்ணி மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கிறார்கள். மறுத்துவர்களும், தூக்கத்திற்கும், ஒய்விற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாமல் தூக்க மாத்திரை கொடுக்கிறார்கள். இப்படி யார் தூக்க மாத்திரையைச் சாப்பிட்டு தூங்குகிறீர்களோ அப்பொழுது புத்தியும் மனதையும் அடுக்கி வைக்கும் வேலையை செய்வதே கிடையாது. தூக்க மாத்திரை மூலமாக ஒரு மனிதனுக்கு ஓய்வு கிடைக்காது. ஆனால் தூக்கம் கிடைக்கும். எனவே யார் யாரெல்லாம் ஓய்வு எடுக்கும் நேரத்தில் தூக்க மாத்திரை மூலமாக கிடைக்கும் தூக்கத்தை அனுபவிக்கிறீர்களோ உங்கள் மனதும் புத்தியும், அடுக்கி வைக்காமலேயே இருக்கும் இப்படி பல மாதங்களாக தூக்க மாத்திரையை நீங்கள் சாப்பிட்டு வந்தால் பல மாதங்களாக மனதையும், புத்தியையும் அடுக்கி வைக்காமல் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
எனவே தூக்க மாத்திரை மூலமாக தூங்கும் அனைவரும் என்னை பொறுத்தவரை ஒரு மனரீதியான நோயாளிகள். அவர்களுக்கு தைரியம் இருக்கவே இருக்காது. எந்த முடிவையும் தெளிவாக எடுக்க முடியாது. எப்பொழுதும் மனதில் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். எனவே தயவு செய்து தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது. உடலுக்கு தூக்கம் தேவையில்லை என்று ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும்பொழுது நாம் ஏன் தேவையில்லாமல் தூக்கத்தை வேண்டும் என்று நினைக்கவேண்டும்.ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். நம் உடலுக்கு என்ன வேண்டுமோ அது உடனே கேட்டுக் பெற்றுக்கொள்ளும் நமது உடலே வேண்டாம் என்று நினைக்கும் பொழுது நாம் தூக்கத்தைக் கொடுத்தால் அந்த தூக்கம் விஷமாக மாறும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
தூக்கம் வரவில்லை என்று கவலைப்படுகிறீர்களே அதற்கு நான் சில வழிமுறைகளை சொல்கிறேன். உங்களால் செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். தினமும் இரவு மதுபானங்கள் சாப்பிடுவதால் நன்றாக தூங்கலாம். செய்வீர்களா? அபின் போன்ற போதை பொருளை பயன்படுத்தினால் நன்றாக தூங்க முடியும் அதை நீங்கள் பயன்படுத்துவீர்களா!
இப்படி நான் உங்களுக்கு ஆலோசனை சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எண்ணெய் திட்டுவீர்கள். அல்லது போலீஸிடம் ஒப்படைப்பீர்கள். ஆனால் மருத்துவர்கள் என்ற பெயரில் நீங்கள் யாரிடம் சென்றாலும் தூக்கத்திற்காக கொடுக்கும் அனைத்து மருந்து மாத்திரைகளிலும் ஆல்கஹால், கஞ்சா, அபின் போன்ற போதை பொருள் மட்டுமே உள்ளது. தூக்க மாத்திரைகளை போதைப் பொருள் இல்லாமல் செய்யவே முடியாது.
உண்மையில் யார் யாரெல்லாம் தூக்க மாத்திரை சாப்பிட்டு தூங்குகிறார்களோ நீங்கள் போதைப் பொருளை சாப்பிடுகிறீர்கள் என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள். பீடி, சிகரெட், சாராயம், கஞ்சா, அபின் போன்றவைகள் எப்படி போதை பொருள்களோ, அதைவிட தூக்க மாத்திரைகள் மிகப் பெரிய போதைப் பொருள் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். உங்களது தூக்க மாத்திரையின் டோஸ் போக போக அதிகரித்துக் கொண்டே போகும். இதன் காரணம் என்னவென்றால், குடிமக்கள் ஆரம்பத்தில் குவாட்டர் குடிப்பவர்கள் நீங்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி வருகிறீர்கள். சிறிய போதை உங்களுக்கு பத்தாமல் மேற்க்கொண்டு பெரிய போதையைத் தேடிச் செல்வீர்கள் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். எனவே தயவு செய்து தூக்க மாத்திரைகளை சாப்பிடாதீர்கள், தூக்கமாத்திரை மூலமாக ஒரு மனிதனின் உடலுக்கு எந்த நன்மையையும் என்றுமே விளைவது கிடையாது. அது நமது நோயை அதிகப்படுத்துமே தவிர குறைய வைக்காது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எனவே தூக்கம் ஒரு நாள் வரவில்லையென்றால் தூங்கவேண்டிய அவசியமில்லை. இப்படி ஒரு நாள் அல்லது இரண்டு நாள் தூக்கம் வராமல் இருந்தால் கவலைப்படாதீர்கள். மூன்றாவது நாள் இரண்டு நாள்களுக்கு சேர்த்து மொத்தமாக நீங்கள் தூங்கிவிடுவீர்கள். உடலுக்கு அறிவு உள்ளது. கண்டிப்பாக எதுவேண்டுமோ அதை நம்மிடம் இருந்துக் கேட்டுக்பெற்றுக்கொள்ளும். எனவே தூக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் நமது சிகிச்சை முறைப்படி அனைத்து முறைகளையும் கடைபிடித்தால் ஒவ்வொரு மாதமும் உங்கள் தூக்க மாத்திரையின் டோசை குறையச் செய்து, நான்கு மாதத்திற்குள் முழுவதுமாக விட்டுவிட்டு நிம்மதியாக வாழ்க்கை முழுவதும் வாழலாம். வாழ்வோம். ஆரோக்கியமாக.