TONGUE IS THE DOCTOR TASTE IS THE MEDICINE

Crypto and Banking

We recommend the following high-quality options for secure Bitcoin transactions and online banking services:

BTC and ETH QR code generator websites

This collection comprises of a variety of online platforms, designed to generate QR codes for Ethereum (ETH) and Bitcoin (BTC) addresses. These websites offer a user-friendly interface with step-by-step guides to help users create custom QR codes that serve as a direct channel to their crypto wallet addresses. Users could conveniently use these generated QR codes for transactions, thus making the process of sending and receiving cryptocurrencies faster and more efficient. The collection includes online tools with different features such as customization of QR codes, error correction capability, and optional encryption for extra security. The generated QR codes from these sites can be used in print and digital format which are scannable with most smartphone cameras or QR code scanner apps. These websites work as powerful tools for streamlining cryptocurrency transactions and promoting the wider use of digital currencies.

CRA Login Canada Revenue Agency

CRA Login section including CRA My Account login, CRA representing a client, CRA business login, MyCRA Login and more. Canada Revenue Agency.


Last updated: March 20, 2024
by and Alex Morrell is a senior correspondent at Business Insider covering Wall Street at large.

நம் உடலில் நோய்கள் ஏற்படும் பொழுது நாக்கு என்ற மருத்துவர் மூலமாகச் சுவை என்ற மருந்தை எப்பொழுதும் கேட்டுக் கொண்டேயிருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் விதவிதமான சுவை சுவையான உணவைத் தேடி அலைகிறார்கள். கர்ப்ப காலத்துப் பெண்களுக்கு மனசுக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்ளுங்கள். மனதுக்குப் பிடித்த உணவை வாங்கி தாருங்கள். என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள, இதில் மிகப் பெரிய அர்த்தம் உள்ளது. கர்ப்பப்பையில் குழந்தையை உருவாக்கும் பொழுது எந்தெந்த உறுப்புகள் சேர்ந்து அந்த வேலையைச் செய்கிறதோ, அந்தந்த உறுப்புகளுக்குச் சம்பந்தப்பட்ட சக்தி நமது உடலில் குறையும். நாக்கு எந்தச் சக்தி குறைந்துவிட்டதோ அது சம்பந்தப்பட்ட சுவையைக் கேட்கும். இதனால் தான் அந்தப் பெண்கள் திடீரென்று இனிப்பி சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது என்று கூறுவார்கள். சாம்பலை அள்ளிச் சாப்பிடுவார்கள். திடீரென கீரை சாப்பிடுவார்கள். அவர்கள் நாக்கு எதாவதைச் சாப்பிட வேண்டும் என்பது போல் இருக்கும். இரவு 2 மணிக்கு எழுந்து திரீரென எதையாவது எடுத்துச் சாப்பிடுவார்கள். ஏனென்றால் குழந்தையை உருவாக்கும் பொழுது கூட நம் உடம்பு சத்துப் பொருட்களையோ மருந்து மாத்திரைகளையோ கேட்பதில்லை. சுவைகளைத்தான் கேட்கிறது.

சுவைகள் என்பது நமது ஆரோக்கியத்திற்கு மிக மிக முக்கியமான ஒரு மருந்தாகும். எனவே தான் நம் முன்னோர்கள் கர்ப்ப காலத்துப் பெண்களுக்கு சோறு கட்டுப் போடுதல் என்ற ஒரு வைபவம் வைத்திருந்தார்கள். சீமந்தம் என்று கூறுவார்கள். அந்த நேரத்தில் ஆறு வகையான சுவையான உணவுகளைத் தயாரித்து அனைவருக்கும் பந்தியிட்டு மகிழ்ந்தார்கள். ஆனால் நாம் அனைவரும் அந்த விழாவிற்குச் சென்று நன்றாகச் சாப்பிட்டு விட்டு வருகிறோம். ஆனால் ஏன் என்பதை இது வரை யாரும் யோசித்ததில்லை. நாம் சாப்பிடுவதற்காக திருவிழா அல்ல. அந்தப் பெண் எந்தெந்தச் சுவையை கேட்கிறாளோ அதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதை அந்தக் குடும்பத்தினருக்கு புரிய வைப்பதற்காகவே அந்த வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இப்படி கர்ப்ப காலத்துப் பெண்களுக்கு அவர்கள் நாக்கு கேட்கும் சுவையைச் சரியாக கொடுப்பது மூலமாக சுகப்பிரசவத்தையும், அழகான, ஆரோக்கியமான குழந்தையையும் பெற்று வந்தார்கள். ஆனால் இப்பொழுது ஸ்கேனிங் வைபவம் ஆன்டி பயாடிக் வைபவம், மருந்து மாத்திரை வைபவம் என்று நடத்திக் கொண்டிருப்பதால் ஊனமான குழந்தைகளும், சிசேரியனும் நடந்து வருகிறது. எனவே தயவு செய்து கர்ப்ப காலத்துப் பெண்களுக்கு அவர்கள் நாக்கு எதைக் கேட்கிறதோ, அந்தச் சுவையை தாராளமாக மனதிற்குப் பிடித்த மாதிரி சாப்பிட அனுமதியுங்கள். அதன் மூலமாகவே நாம் ஆரோக்கியமான குழந்தையைப் பெற முடியும். ஆனால் இப்பொழுது கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வந்து விட்டதென்று இனிப்புப் பொருட்களைச் சாப்பிட வேண்டாமென்று சில மருத்துவர்கள் கூறுகிறார்கள். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். கர்ப்ப காலத்தில் நாக்கு இனிப்பு கேட்கும் பொழுது ஒரு வேலை நீங்கள் கொடுக்காமல் இருந்தால் குழந்தைக்கு சில குறை வர வாய்ப்புள்ளது. எனவே யார் யாருக்கெல்லாம் நோய் வந்ததோ அவர்களெல்லாம் தன்னைக் கர்ப்ப காலத்துப் பெண்ணாக நினைத்து மனதிற்குப் பிடித்த மாதிரி உங்கள் நாக்குக்குப் பிடித்த் உணவுகளைத் தாராளமாக சாப்பிடுங்கள். அப்பொழுதுதான் நோய்கள் குணமாகும்.

கசப்பு, துவர்ப்பு என்ற இரு சுவைகளை நாம் பொதுவாகச் சாப்பிடுவதில்லை. இனிப்புச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமென்று கூறுகிறார்கள். அதை இனிமேல் சாப்பிடாதீர்கள். உப்புச் சாப்பிட்டால் BP எகிறிவிடும் என்கிறார்கள். எனவே, இனி உப்பைத் தொடாதீர்கள். காரம் சாப்பிட்டால் தோல் நோய் வருமென்று கூறுகிறார்கள். எனவே, காரம் சாப்பிடாதீர்கள். பபுளி சேர்த்தால் மூட்டு முழங்கால் வலி வருமென்று கூறுகிறார்கள்.எனவே, புளியைச் சேர்த்து கொள்ள வேண்டாம். இப்படி இருக்கும் ஆறு சுவையை ஒவ்வொரு காரணம் காட்டி மருத்துவர்கள் சாப்பிட வேண்டாம் என கூறுகிறார்களே, நாம் எதைத்தான் சாப்பிடுவது எந்த உணவு எடுத்துக் கொண்டாலும் அதில் ஆறு சுவைகளில் ஏதோ ஒரு சுவை அதில் மிகுதியாகவோ, குறையாகவோ இருக்கும். இப்படி ஒவ்வொரு சுவையும் வேண்டாமென்று கூறினால் நாம் பட்டினிதான் கிடக்க வேண்டும். எனவே, தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். எந்தச் சுவைக்கும். எந்த நோய்க்கும் சம்பந்தமே கிடையாது. உங்கள் நாக்குதான் மருத்துவர். சுவைதான் மருந்து. எனவே, நீங்கள் எந்தச் சுவையை சாப்பிட வேண்டும். எந்தச் சுவையை சாப்பிடக் கூடாதென்று எனக்கும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது. வேறு யாருக்குத் தெரியும். அவரவர் நாக்குக்கு மட்டுமே தெரியும். இனிப்பான பொருளை வாயில் வையுங்கள். பிடித்திருந்தால் இன்னொரு இனிப்பைச் சாப்பிடுங்கள். மூன்றாவது இனிப்பைச் சாப்பிடும் பொழுது நாக்கு திகட்டும். அப்பொழுது நிறுத்திக் கொள்ளுங்கள். நாக்கு திகட்டிய பிறகு இனிப்பு சாப்பிட்டால் உங்களுக்கு இனிப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரும். அதே போல் உப்பு அதிகமாக உணவில் இருந்தால் சாப்பிட முடியுமா? சாப்பிட முடியாது. ஆனால், குறைவாக இருந்தால் சாப்பிடுகிறோமே அதுதான்.

அந்தக் காலத்தில் உப்பை இலைகளில் வைப்பார்களே அது எதற்கு? நீங்கள் உணவை எடுத்து வாயில் சாப்பிட வேண்டும். உப்பு குறைவாக இருந்தால் உங்க நாக்குக்கு எவ்வளவு உப்பு சாப்பிட்டால் நன்றாக இருக்குமோ அதை நீங்கள் உங்கள் சாப்பாட்டில் கலந்து கொள்ள வேண்டும். ஆனால், நம்மில் பலர் சாப்பிடும் பொழுது உப்பு குறைவாக உள்ளதென்று மொத்த சாம்பாரில் உப்பைக் கொட்டுகிறார்கள். ஒவ்வொருடைய நாக்கின் சுவையும் வேறு வேறாக இருக்கும். எனவே, நம் நாக்குக்கு ஒரு சுவை அதிகமாக, குறைவாக இருக்கிறதென்றால், அடுத்தவர்களுக்கு அதே போல் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எனவே சமைக்கும் பொழுது உப்பு, புளி, காரம் அனைத்தையும் அளவாக செய்யுங்கள். அவரவர்களுக்கு உப்புத் தேவையென்றால் அவரவர் தட்டில் மேட்டுமே அவரவர் உப்பு சேர்த்துச் கொள்ளலாம். காரம் தேவையென்றால் ஊறுகாயைச் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி அவரவர் தட்டில் மட்டுமே சுவைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காகத்தான் பலவிதமான பொரியல், அவியல், ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை நமது முன்னோர்கள் கண்டுபித்து வைத்திருக்கிறார்கள்.

எனவே, தயவு செய்து இனிமேல் யாரும் எந்தச் சுவையைப் பார்த்தும் பயப்படாதீர்கள். சுவைகளனைத்தும் நாமக்கு நல்லது செய்வதற்கு மட்டுமே உள்ளது. ஆனால், உங்கள் நாக்குத் திகட்டிய பிறகு அல்லது உங்கள் நாக்குக்குப் பிடிக்காத எந்த சுவையையும் சாப்பிடாதீர்கள். நாக்குதான் மருத்துவர். சுவைதான் மருந்து என்பதைப் புரிந்து கொண்டு இனி நாக்குக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடுவது மூலமாக நோயின்றி வாழலாம்.

சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடுங்கள். ஒன்றும் ஆகாது BP நோயாளிகள் உங்கள் நாக்குக்குத் தேவைப்படும் அளவுக்கு உப்பு சாப்பிடுங்கள். உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும். இப்படி எந்தச் சுவையும் ஒதுக்காமல் உங்கள் நாக்கு எதைக் கேட்கிறதோ, அதை சாப்பிடுவது மூலமாக நாம் இனி ஆரோக்கியமாக இருப்போம். வாழ்வோம் ஆரோக்கியமாக.!

Thanks to : ValaiTamil

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.