எளிய சித்த மருத்துவ குறிப்புகள்
- நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் வசம்பு பொடியை சிறிதளவு தேனில் குழைத்து குழந்தைகளுக்கு தர காய்ச்சல் குணமாகும்.
- நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் காலை மாலை வேளைகளில் சிறிதளவு வசம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து வென்னீரில் கலந்து சாப்பிட்டுவர நரம்பு தளர்ச்சி கை, கால் நடுக்கம் குணமாகும்.
- ஆடாதொடை பொடி, நிலவேம்பு பொடி, விஷ்ணுகரந்தை பொடி, இவைகளுடன் கிருந்தை நாயகம் இலை, குப்பைமேனி இலை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து காலை மாலை குடித்துவர எப்பேர்பட்ட காய்ச்சலும் 3 நாட்களில் சரியாகி விடும். மேலும் உடல்வலியும் தீரும்.
- சர்பகந்தா பொடியை சிறிதளவு காலை, மாலை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் நீங்கி, இரவில் தூக்கம் நன்றாக வரும். மன சோர்வு நீங்கும்.
- பீட்ரூட் சாறுடன் வெள்ளரி சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
- பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கி எலும்பிச்சை சாற்றில் ஊற வைத்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும்.
- பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளது. பீட்ரூட்டை சாப்பிடும் போது நைட்ரேட்டுகள் நமது உடலில் உள்ள பார்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றப்பட்டு இரத்த நாளங்களை விரிவடய செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேன்படுத்தும். மேலும் ஆண்மை சக்தியை அதிகரித்து பாலுறவில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
- அதிமதுரம், விதை நீக்கிய கடுக்காய் தோல், திப்பிலி, மிளகு இவற்றை வறுத்து பொடித்து, தினசரி காலை மாலை நெய்யுடன் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கி கண் ஒளி பெரும்.
Category: தமிழ் மருத்துவம்