இளநரை நீக்கி, முடி உதிர்வதையும் தடுக்கலாம்
- அதிமதுரப் பொடி 50 கிராம்
- வசம்பு பொடி 50 கிராம்
- சீயக்காய் தூள் 100 கிராம்
- பூந்திக் கொட்டை பொடி 50 கிராம்
இவற்றை பசும் பாலில் ஊற வைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு, இளநரை நீங்கி தலைமுடி பட்டுப் போல் மின்னும். சருமம் வனப்படையும். தலைமுடி உதிராது.
மேலும்,
- முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து குறைபாடுகள் மட்டுமே பெரும்பாலும் இதற்க்கான காரணமாக அமைகிறது.
- தலை முடி உதிர்வதை தடுக்க, நாலுடேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாரையும் அதே அளவு தேங்காய் பாலையும் சேர்த்து தலையில் தேய்த்து ஒரு-மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.வாரம் ஒரு முறை இதுபோல செய்தால் முடி-உதிர்வதை கட்டுபடுத்தலாம்.
- முடிஉதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதையையும், மிளகையும் சேர்த்து அரைத்து தேய்த்து வர முடிவளரும்.
- கீழாநெல்லியின் வேரை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டாக நறுக்கி தேங்கா எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்குதடவி வந்தால் வழுக்கை மறையும், முடி வளரும்.
Category: அழகு குறிப்புகள், தமிழ் மருத்துவம்