ஆண்மை தன்மையை அதிகரிக்க பேரிச்சையை பயன்படுத்தும் முறை


ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே உ‌ள்ளது.
உயர்ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (உ‌ண்மையான தே‌ன்) ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள்.
பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள். பின்னர் அதை எடுத்து உள்ளே வைத்து விடவும்.
தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள்.
இதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள்.
இப்படி தொடர்ந்து 60 நாட்கள் தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும்.
எந்த பக்கவிளைவுகளும் இல்லாத இந்த இயற்கை முறையை கடைபிடித்து ஆண்களே உங்களை கவலையை தீர்த்து கொள்ளுங்கள். கண்ட கண்ட போலி மருத்துவர்களில் பேச்சை கேட்டு வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்.Source:tamil4health.com

Category: தமிழ் மருத்துவம்

- October 6, 2016

Leave a Reply

Your email address will not be published / Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.